Tuesday, November 27, 2012

திருட்டு ஆப்பிள்

நான் ஓமன்  நாட்டில்  மசிராஹ் வில் இருந்தபோது ஒரு பிரபலமான   மீன் கம்பெனியில்  வேலை பார்த்து வந்தேன் .அந்த நாட்களில்   பாலைவன  தேசத்தில்  ஒரு  வசந்த  கால அனுபவம் ஏற்பட்டது அதுதான்  முதலாளி யின்  மகள் திருமணம் . திருமணத்தை  முன்னிட்டு  முதலாளி யின் குடும்பம்  கோலாகல  கொண்டாட்டத்திற்கு தயாரானது .
அந்த  கிராமத்தின்  அணைத்து  மக்களும்  கொடுப்பதற்காக  டன் கணக்கில் பழங்களும் ,அல்வா  முதலான  பலகாரக வகைகள் கொண்டு  வந்து இறக்கினர் .இவற்றை  வைப்பதற்காக  எங்கள்  குடியிருப்பின்  கடைசி வீட்டை  தேர்ந்தெடுத்து இருந்தனர் .அந்த வீட்டில்  யாரும் குடியிருக்க வில்லை ,காரணம்  A /C  வசதி  இல்லாமல் இருந்தது .
நாங்கள்  பதினைந்து பேரும்  சேர்த்து தான்  இவற்றை  இறக்கினோம் ,ஆனால் எங்களுக்கு  ஒரு பழம்  கூட அந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை .ஒரு கூடை  ஆப்பிள்  அரபிக்கார டிரைவர்க்கு  தெரியாமல்  மாற்றி வைக்க  சமையல்காரன்  செய்த முயற்சி  தோல்வியில்  முடிந்தது .புத்திக்கு  எட்டியது  கைக்கு எட்டவில்லை .
ஆனாலும்  இவ்வளவு  தின்பண்டம்   கண்டு விட்டு ,உண்ணமுடியாமையால்  எனக்கு உறக்கமே  இல்லை .என் வாழ்வில்  இவ்வளவு  பழங்களை  நேரில் காண்பது  இதுவே முதல் முறை என்ற உண்மையை இங்கு வெளிப்படுத்துவதில் எனக்கு  வெட்கம் இல்லை .இரவு 11 மணி ,அனைவரும்  உறங்கியிருப்பர்கள் என்று  நானே  நினைத்துக்கொண்டேன் .எனது  அறையிலிருந்து  வெளியே வந்து  பழங்கள் இருந்த  அறையை  நோட்டம் விட்டேன் .எனது அறைக்கு  அடுத்த அறையாக  இருந்ததை  இப்போது  நினைத்து  பெருமை பட்டுக்கொண்டேன் . அந்த  அறையை  நோக்கி மெல்ல நடந்தேன் .அறையின் வலது புறத்தில்  விண்டோ  ஏசி  இருந்த அடையாளம்  மட்டுமே  உள்ள  துவாரத்தை  கண்டேன் . அதன் வழியாக தாவிக்குதித்தேன் . எனக்கு  மிகவும்  விருப்பமான  பச்சை  ஆப்பிள் கூடை  ஒன்றை  தூக்கி  ஏசி துவாரத்தில்  வைத்தேன் .பின்னர்  நானும் அதன்வழியாக  வெளியேறினேன் .அப்போது முதுகில்  ஒரு கீறல்  துவாரத்தின்  மேல் பக்கம் இருந்த  ஒரு ஆணிதான்  காரணம் .
மறுநாள்  சில ஆப்பிள்களை  நான் சாப்பிட்டுவிட்டு   பக்கத்துக்கு  அறை  நண்பர்களுக்கு  10 ஆப்பிள்களை  கொடுக்க சென்றேன் . அவர்களது  கட்டிலின் கீழ்  ஆரஞ்சு  கூடை இருப்பதைக் கண்டேன் .மற்றொரு அறையில்  இதுபோல்  சென்றபோது  அல்வா  இருப்பதைக்கண்டேன் . மனதில் ஒரு சந்தோஷம்  ,திருடியது நான் மட்டுமல்ல .எனக்குப் பிறகும் சிலர் .ஆக  எல்லா பதார்த்தங்களும்  எங்களுள்  பண்ட மாற்று முறை ஆனது .திடீரென்று  நினைத்துப் பார்த்தேன்  மற்றவர்  முதுகை  தொட்டுப்பார்க்க  வில்லையே.. ! .

Wednesday, November 21, 2012

அந்த இனிய நாட்கள்

நமது  வாழ்வில்  ஒரு  கவலையும்  இல்லாத  அந்த  பள்ளிப்பருவம் எவ்வளவு  இனிமையானது  என்பதை இப்போது தான்  உணர முடிகிறது .அடுத்த வேளை  உணவு  முதல்  அணைத்து  தேவை களுக்கும்  ஒரு கவலையும்  கொள்ளத் தேவை இல்லை .ஆனால்  அன்றைய  நாளில்  எதோ  ஒரு காரணம்   நாம்  வளரவேண்டும்  என்று  மட்டும்  மனதில்  ஏக்க மாக இருக்கும். இக்கவலை  எனக்கு  மட்டும் தானா ? என்று சில சமயம்  யோசித்து  பார்ப்பேன் .
5 ஆம் வகுப்பு  படித்த போது  வேளாங்கண்ணி  இன்ப சுற்றுலா சென்றது  இப்போதும்  நினைவில்  உள்ளது. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ,உப்பு  காய்ச்சுவது தான் அது .பலர் சொல்லக்கேட்டுள்ளேன் கடல் நீரிலிருந்து  உப்பு  காய்ச்சு வதைப்பற்றி .எனவே  வேளாங்கண்ணி சுற்றுலா  சென்ற பொது  யாருக்கும் தெரியாமல் கடல் நீரை  ஒரு பாட்டிலில் எடுத்து வந்து  உப்பு தயாரித்து பார்த்தேன் .அதை இப்போது  நினைத்துப் பார்கையில்  நகைப்பிற் குரிய தாக இருக்கிறது .
இதுபோல் பல நினைவுகள்  இருந்தாலும்  ஒரு  நிகழ்வை மட்டும் இங்கே  தெரிவிக்கிறேன் .எங்கள்  வீட்டில் கோவைக்காய் கொடி  வளர்ந்து இருந்தது .கோவை இலையை பறித்து கட்டு கட்டி  பள்ளியில்   விற்பனை செய்வேன் ,ஒரு சிலேட் குச்சிக்கு  ஒரு  கட்டு  கோவை இலை  என்று . காரணம்  கோவை இலையை கொண்டுதான்  சிலேட்டில்  உள்ள  எழுத்துக்களை  அழிக்க  பயன்படுத்துவோம் .
ஒருநாள்  அவ்வாறு  கோவை இலையை  விற்கும்போது  கலிய மூர்த்திக்கும்   எனக்கும் சண்டை வந்து விட்டது . அவன் என்னை  கடித்து விட்டான் .பிறகு  நான் அழுது கொண்டே  வீட்டிற்கு  வந்தேன் .
      மறுநாள்  என் தந்தை  கலியமூர்த்தியின் தந்தையிடம்  புகார்  செய்தார்   கீழ் கண்டவாறு
     " உன் பையன்  கலிய மூர்த்தி  என் பையன  கடிச்சு புட்டன்யா "  என்று .அதற்க்கு  கலிய மூர்த்தியின் தந்தையோ  " என்னப்பண்றது யா ? சின்னப்புள்ளைங்க தானே   நாய் கடித்தால்  திருப்பியா ? கடிப்போம் !  அந்தமாதிரி  நினைச்சுக்கோ '  என்று .
அதற்க்கு எனது  தந்தையின்   மறுமொழி  இவ்வாறு  இருந்தது " சரி சரி  என் புள்ளைக்கு  தொப்புள  சுத்தி   ஊசி  போட்டுக்கறேன் "!!

Monday, November 5, 2012

இது ஒரு ஹிந்தி கதை

சிறு வயதில்   இந்தி  மீது  ஏனோ  ஒரு வெறுப்பு . நான் கண்ட முதல்  மெகா சீரியல்  ராமாயணம் தான் .தூர தர்சனில்   அப்போது  இந்தி தெரியாமல்   ஊமை படம்  பார்ப்பது போல்   ஓர் உணர்வு  ஏற்ப்படும் .தமிழ்  ஒலிபரப்பு  நேரம் மிக குறைவு . ஞாயிறு  ஒரு நாள் தமிழ் படம்   பார்ப்பது  அப்படி ஒரு  சந்தோஷம்  .அதன் பிறகு  அம்மாவிடம்  அடி வாங்கி  அழுவது  ஒரு தொடர்கதைதான் .
 என்றோ  ஒருநாள்  கேரளா  செல்ல  கும்பகோணம்   ரயில்வே ஸ்டேஷன்  போகும்போது  தார் மூலம்  அழிக்கப்பட்ட  சில இந்தி  எழுத்துக்களை  காண நேரிடும்  அப்போதுகூட  இந்தி  படிக்க கூடாத  ஒரு பாஷை என்று நினைத்துக் கொள்வேன் . எங்கவூர்  அஞ்சலகத்திலும்   ,ஆரம்ப சுகாதார நிலையத்திலும்  இந்தி எழுத்துக்களை கண்டு  எனக்குள்  கோபம் கொண்டுள்ளேன் .
          பல  சமயங்களில்  ஆழ்துளை  கிணறு  அமைக்க  வட  இந்தியர்கள்  எங்கள் கிராமத்திற்கு  வருவதுண்டு , அவர்கள்  பேசுவதை கண்டு  வெறுப்புடன்  நிற்ப்பேன்  ஆனால்  அவர்களது  வேலைகளை  வேடிக்கை   பார்ப்பதுண்டு .அவர்கள் பேசியது  தெலுங்கோ  ,கன்னடமோ   இருக்கும் .நான்  நினைத்தது  அவர்கள் இந்திக்காரர்கள் என்று தான் .
 என் தந்தையின்  குரு  சண்முகம் டைலர்  கடையில்  எப்போதும்  இந்தி பாட்டு போடுவார்கள் .ஒரு மாறுதலுக்காக .ஆனால்  சண்முகம்  டைலர்  அவர்கள்  திராவிட  பற்று மிக்க  திமுக  முக்கிய  புள்ளி .பக்கத்துக்கு கடை  அய்யர்  ஹோட்டல்  ரவி  இதுபோல்  இந்தி பாடல் களை  போடுவார் . இவர்கள்  யாவருக்கும் இந்தி தெரியுமோ ? என்று  நான்  ஆராய்ச்சி செய்யவில்லை .

ஒருநாள்  O N G C  ஆட்கள்   பெட்ரோல்  ஆராய்சிக்காக   அடுத்த  கிராமத்திற்கு  வந்திருந்தனர் .நான் நண்பர்களுடன்  வழக்கம்போல்  வேடிக்கை பார்க்க சென்றேன் .அவர்கள்  ஆழ்  துளை  கிணறு  வெட்டிக் கொண்டிருன்தனர் . வேலை முடிந்ததும்  ரேடியோவில்  இந்திபாட்டுக்கு  அவர்கள்  கவலை மறந்து  டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள்   அதையும்  வேடிக்கை பார்த்துவிட்டு  தான் வீடு திரும்புவேன் .
ஏனோ  அன்று முதல்  எனக்கும்  இந்தி பாட்டின்  இசை  பிடித்துவிட்டது .இந்தி மீது இருந்த  வெறுப்பு  முற்றிலும் மாறிவிட்டது .ஒரு மொழியை  கற்றால் அதனால்  நன்மை மட்டுமே என்பதை  அறிந்தேன் .

                                  கும்பகோணம்  கல்லூரியில் சேர்ந்தபோது தமிழ் பற்று       காரணமாக       B A   தமிழ் இலக்கியம்  தேர்ந்தெடுத்தேன் . அங்கு இந்தி  சிறப்பு வகுப்பு இருப்பதை அறிந்து  அதற்க்கு  விண்ணப்பித்தேன் .மிக விரைவில்  எனது விருப்பம்  நிராகரிக்கப்பட்டது . காரணம்  கடந்த மூன்று  ஆண்டுகளாக  ஒரு மாணவன் போலும்  இல்லாததால்  ஹிந்தி  பண்டிட்  பனி மாற்றல் கோரி  விண்ணப்பித்திருந்தார் ,அவர்  விண்ணப்பம்  ஏற்க்கப்பட்டதே  காரணம் .