நமது வாழ்வில் ஒரு கவலையும் இல்லாத அந்த பள்ளிப்பருவம் எவ்வளவு
இனிமையானது என்பதை இப்போது தான் உணர முடிகிறது .அடுத்த வேளை உணவு
முதல் அணைத்து தேவை களுக்கும் ஒரு கவலையும் கொள்ளத் தேவை இல்லை .ஆனால்
அன்றைய நாளில் எதோ ஒரு காரணம் நாம் வளரவேண்டும் என்று மட்டும்
மனதில் ஏக்க மாக இருக்கும். இக்கவலை எனக்கு மட்டும் தானா ? என்று சில
சமயம் யோசித்து பார்ப்பேன் .
5 ஆம் வகுப்பு படித்த போது வேளாங்கண்ணி இன்ப சுற்றுலா சென்றது இப்போதும் நினைவில் உள்ளது. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ,உப்பு காய்ச்சுவது தான் அது .பலர் சொல்லக்கேட்டுள்ளேன் கடல் நீரிலிருந்து உப்பு காய்ச்சு வதைப்பற்றி .எனவே வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற பொது யாருக்கும் தெரியாமல் கடல் நீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்து உப்பு தயாரித்து பார்த்தேன் .அதை இப்போது நினைத்துப் பார்கையில் நகைப்பிற் குரிய தாக இருக்கிறது .
இதுபோல் பல நினைவுகள் இருந்தாலும் ஒரு நிகழ்வை மட்டும் இங்கே தெரிவிக்கிறேன் .எங்கள் வீட்டில் கோவைக்காய் கொடி வளர்ந்து இருந்தது .கோவை இலையை பறித்து கட்டு கட்டி பள்ளியில் விற்பனை செய்வேன் ,ஒரு சிலேட் குச்சிக்கு ஒரு கட்டு கோவை இலை என்று . காரணம் கோவை இலையை கொண்டுதான் சிலேட்டில் உள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்துவோம் .
ஒருநாள் அவ்வாறு கோவை இலையை விற்கும்போது கலிய மூர்த்திக்கும் எனக்கும் சண்டை வந்து விட்டது . அவன் என்னை கடித்து விட்டான் .பிறகு நான் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தேன் .
மறுநாள் என் தந்தை கலியமூர்த்தியின் தந்தையிடம் புகார் செய்தார் கீழ் கண்டவாறு
" உன் பையன் கலிய மூர்த்தி என் பையன கடிச்சு புட்டன்யா " என்று .அதற்க்கு கலிய மூர்த்தியின் தந்தையோ " என்னப்பண்றது யா ? சின்னப்புள்ளைங்க தானே நாய் கடித்தால் திருப்பியா ? கடிப்போம் ! அந்தமாதிரி நினைச்சுக்கோ ' என்று .
அதற்க்கு எனது தந்தையின் மறுமொழி இவ்வாறு இருந்தது " சரி சரி என் புள்ளைக்கு தொப்புள சுத்தி ஊசி போட்டுக்கறேன் "!!
5 ஆம் வகுப்பு படித்த போது வேளாங்கண்ணி இன்ப சுற்றுலா சென்றது இப்போதும் நினைவில் உள்ளது. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ,உப்பு காய்ச்சுவது தான் அது .பலர் சொல்லக்கேட்டுள்ளேன் கடல் நீரிலிருந்து உப்பு காய்ச்சு வதைப்பற்றி .எனவே வேளாங்கண்ணி சுற்றுலா சென்ற பொது யாருக்கும் தெரியாமல் கடல் நீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்து உப்பு தயாரித்து பார்த்தேன் .அதை இப்போது நினைத்துப் பார்கையில் நகைப்பிற் குரிய தாக இருக்கிறது .
இதுபோல் பல நினைவுகள் இருந்தாலும் ஒரு நிகழ்வை மட்டும் இங்கே தெரிவிக்கிறேன் .எங்கள் வீட்டில் கோவைக்காய் கொடி வளர்ந்து இருந்தது .கோவை இலையை பறித்து கட்டு கட்டி பள்ளியில் விற்பனை செய்வேன் ,ஒரு சிலேட் குச்சிக்கு ஒரு கட்டு கோவை இலை என்று . காரணம் கோவை இலையை கொண்டுதான் சிலேட்டில் உள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்துவோம் .
ஒருநாள் அவ்வாறு கோவை இலையை விற்கும்போது கலிய மூர்த்திக்கும் எனக்கும் சண்டை வந்து விட்டது . அவன் என்னை கடித்து விட்டான் .பிறகு நான் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தேன் .
மறுநாள் என் தந்தை கலியமூர்த்தியின் தந்தையிடம் புகார் செய்தார் கீழ் கண்டவாறு
" உன் பையன் கலிய மூர்த்தி என் பையன கடிச்சு புட்டன்யா " என்று .அதற்க்கு கலிய மூர்த்தியின் தந்தையோ " என்னப்பண்றது யா ? சின்னப்புள்ளைங்க தானே நாய் கடித்தால் திருப்பியா ? கடிப்போம் ! அந்தமாதிரி நினைச்சுக்கோ ' என்று .
அதற்க்கு எனது தந்தையின் மறுமொழி இவ்வாறு இருந்தது " சரி சரி என் புள்ளைக்கு தொப்புள சுத்தி ஊசி போட்டுக்கறேன் "!!