Tuesday, June 12, 2012

மன கணக்கு

நான்  முதன் முதலாக  கால்குலேட்டரை  கண்டது   1988 களில் தான்
எங்கவூர்  சொசைட்டி  செகரட்டரி   S M T ராஜேந்திரன்  கையில் தான் . எப்போதும்  கையில்  வைத்து  பயன்படுத்துவர் . தற்கால  லேப்டாப் போல ,எனக்கு அதை  தொட்டு பார்க்க  வெகு நாளாக  ஆசை  ஆனால்  அவரிடம் கேட்டதில்லை . பிறகு  மூன்று வருடம் கழித்து  பக்கத்துக்கு வீட்டு பழைய  நண்பன்  ராம் குமார்  கையில்  ஒரு புதிய  வெளிநாட்டு  கால்குலேட்டர் .அவனது சித்தப்பா  துபாய் லிருந்து  கொண்டுவந்தது .தொட்டு பார்க்க கேட்டேன்  அவன்  கொடுக்கவில்லை . சில நேரங்களில் அதை நினைத்து வருத்தப் படுவேன்  பிறகு மறந்து விடுவேன்
நான்  +1  படிக்கும்போது   என் தந்தை  எனக்கு ஒரு கால்குலேட்டர்   பகரினில்  இருந்து கொடுத்துவிட்டார் ,எனக்கு நன்றாக  நினைவு உள்ளது  எனது  பள்ளி  பதிவு என் உள்பட அது  94R711 .
1994 களில்  அவனியாபுரத்துல + 1 சேர்ந்தது .
அவ்வாறு  நான் கேட்காமலேயே  என் தந்தை  எனக்கு  அளித்த  அந்த கால்குலேட்டரை   கும்பகோணத்தில்  150  ரூபாய்க்கு  விற்று  பாண்டிச்சேரி  ஓடிவிட்டேன்  காரணம்   ஜான்  சுந்தர் ராஜ் என்ற  ஆங்கில  ஆசிரியரின்  தொந்தரவு  தாங்க முடியாமல் .
மறு நாளே வீடு திரும்பியது  வேறு கதை .
இதை  ஏன்  இங்கு  சொல்கிறேன்  என்றால் , கால்குலேட்டர்  இல்லாத  கலத்தில்  போட்ட  மனக்கணக்கு  இன்றைய  கலத்தில்  வருவதில்லை. கால்குலேட்டர்  இல்லாத இல்லாத  கணக்கு  ஆமணக்கு   சிலருக்கு  ஆமணக்கு  எண்ணெய்  என்று சொன்னாலும்  தவறு இல்லை .

No comments:

Post a Comment