Thursday, June 14, 2012

அனிதா எங்கே ?

1996 -99 இல்  கும்பகோணம்  அரசு ஆடவர்  கல்லூரியில்  படிக்கும்போது தினமும் பேருந்து  தடம்  எண் 46 இல்  செல்வது வழக்கம் ,அணைத்து நண்பர்களும்  அதில் வருவார்கள்  அன்னியூரில்  இருந்து  பேருந்து புறப்படும் , வடமட்டம்  நிறுத்தத்தில்  நானும் இளையராஜாவும்  ஏறுவோம்  ஆடுதுறை  வழியாக  கும்பகோணம்  வந்தடையும் , பல  நேரம்  கலாட்டாக்களும் உண்டு .
        தினமும்   செட்டிமண்டபத்தில்   ஏறுவாள்  அனிதா ,எங்கள்  நட்பு தொடர்ந்தது .2000 தில் குடும்பத்துடன்  கோயமுத்தூர்  இடபெயர்சி  செய்தோம் . அனால் அவளுடன் தொடர்பு  முறிந்துவிட்டது . காரணம்  நான்  பகரின்  சென்றுவிட்டேன் .நான்கு  ஆண்டுகள்  கழித்து  2004 இல் கும்பகோணம்  சென்றபோது  மறக்காமல் (?) செட்டிமண்டபம்  சென்றேன் .
        பழைய  நினைவுடன்   நடந்து  சென்று  அவள் வீட்டை  அடைந்தேன் .அழைப்பு  மணி அடித்தவுடன்  ஓடிவந்து  கதவு  திறந்து  பேசாமல் நின்றாள் . நான்  பேசினேன் 
 "  அனிதா   சௌக்யமா "
  "என்ன  தெரியல ?"

     " sorry  அனிதா  கல்யாணமாயி  போயிட்டா'
      " நான்  அவள் தங்கை "
" இட்ஸ்   ஓகே!  கேட்டதா சொல்லுங்க "
என் பெயர் கூட  சொல்லாமல்  வந்துவிட்டேன் .

No comments:

Post a Comment