" கருப்பங்காட்டு பக்கமா இனிமே போக கூடாது " என்று கூறிய முத்தப்பா விற்கு உதறல் எடுத்தது .யாரோ சொல்லக் கேட்டு இவனும் பயந்துள்ளான் .ராமநாதன் தைரியம் கொடுத்தான் ' டேய் இதெல்லாம் மனப்ராந்தி டா " என்றான்
"இல்லடா வாயில இருந்து தீ பிழம்பா வந்ததுடா " முத்தப்பா வின் இதயம் பட படத்தது . நடுக்கத்தில் இருந்த அவன் உடல் அப்போதே சூடாகத்தான் இருந்தது . வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை ,இரண்டு தினங்கள் கடை வீதிக்கு கூட முத்தப்பா வரவில்லை . விசாரித்ததில் கடும் ஜுரம் .இரு தினங்கள் பள்ளிக் கூடமும் செல்லவில்லை .
போன மாசம் கூட இந்த மாதிரிதான் உளறினான் ஆனால் அப்போது இவன் கொல்லி வாய் பிசாசு வை பார்க்க வில்லையாம் . முனுசாமி பையன் காத்த முத்து சொல்லித்தான் தெரியும் என்றான் . ஒருநாள் சுடுகாட்டு பக்கமா கிட்டிபுள் விளையாட போனப்ப காத்த முத்துவின் அப்பா எங்களிடம் சொன்னது ஞாபகம் உள்ளது . பெண் செத்துப்போனால் பேய் என்றும் ஆண் செத்துப்போனால் பிசாசு என்றும் கூறினார் .
ஆனால் இந்த கொல்லிவாய் பிசாசு எப்படி உருவாகிறது என்று மட்டும் சொல்லவில்லை .இதை கேட்ட பிறகும் அங்கு கிட்டிபுள் விளையாடச்செல்ல நாங்கள் ஒன்றும் கேனப்பய இல்ல என்றே முத்தப்பா சொல்லிவிட்டான் .
பூங்குடி தோப்புல கள்ளு குடிக்க போறவங்களுக்கு பயமே இருப்பதில்லை .பல தடவை பார்த்துள்ளோம் கள்ளு , சாராயம் குடிக்கிற ஆளுங்க கிட்ட பேய் பிசாசு அண்டாதுன்னு புளுகியதும் அவர்தான் .
ஒருநாள் அன்னியூர் தீமிதி பாத்துட்டு வரும்போது சுடுகாட்டு வழியே வரவேண்டி வந்தது .முத்தப்பா தான் சைக்கிள் ஓட்டினான் ,நான் பின்னால் அமர்ந்து இருந்தேன் . சுடுகாடு தாண்டும் வரை கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன் .இருந்தாலும் யாரோ எங்கள் சைக்கிளை பிடித்து இழுப்பது போல் உணர்ந்தேன் எல்லா தெய்வங்களையும் மனதில் நினைத்து ,ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம் .
இது நடந்து சில நாட்கள் கழித்து முத்தப்பாவும் நானும் கருப்பங்காடு வழியாக ஒரு நாள்
செல்ல
நேர்ந்தது .மனதில்
தைரியத்தை வரவழைத்து க்கொண்டு நடந்தோம் .தூரத்தில் யாரோ? இருவர் நடப்பது தெரிந்தது . ஐ ஐயோ பேயும் பிசாசும் சேர்ந்து போகிறதே என்று கை கால் உதறலுடன் பார்த்தால் முனுசாமியின் மூத்த மகன்
பாண்டியனும் கடைசி வீட்டு சாந்தி அக்காவும் கருப்பங்காட்டுப்பக்கம் ஒதுங்குவது தெரிந்தது . நான் முத்தப்பாவிடம் சப்தமில்லாமல் சொன்னேன் " டேய் கொல்லி வாய்
பிசாசு
டோய்
வா
திரும்பிபோயிடலாம்" ! .
No comments:
Post a Comment