Thursday, December 27, 2012

கொல்லி வாய் பிசாசு !





" ருப்பங்காட்டு பக்கமா  இனிமே போக கூடாது "  என்று கூறிய  முத்தப்பா விற்கு உதறல் எடுத்தது .யாரோ  சொல்லக் கேட்டு  இவனும்  பயந்துள்ளான் .ராமநாதன் தைரியம் கொடுத்தான்  ' டேய்  இதெல்லாம்  மனப்ராந்தி டா " என்றான்
"
இல்லடா  வாயில  இருந்து தீ பிழம்பா  வந்ததுடா "  முத்தப்பா வின்  இதயம்  பட படத்தது . நடுக்கத்தில்  இருந்த  அவன்  உடல்  அப்போதே  சூடாகத்தான் இருந்தது . வீட்டில் யாரிடமும்   சொல்ல வில்லை ,இரண்டு தினங்கள்  கடை வீதிக்கு கூட  முத்தப்பா  வரவில்லை . விசாரித்ததில்  கடும் ஜுரம்  .இரு தினங்கள் பள்ளிக் கூடமும் செல்லவில்லை .

போன மாசம் கூட  இந்த மாதிரிதான்  உளறினான்  ஆனால்  அப்போது  இவன்  கொல்லி வாய் பிசாசு வை   பார்க்க வில்லையாம் . முனுசாமி   பையன்   காத்த முத்து  சொல்லித்தான்  தெரியும்  என்றான் . ஒருநாள்  சுடுகாட்டு  பக்கமா   கிட்டிபுள்   விளையாட  போனப்ப  காத்த முத்துவின்  அப்பா  எங்களிடம் சொன்னது ஞாபகம்  உள்ளது . பெண்  செத்துப்போனால்  பேய்  என்றும் ஆண் செத்துப்போனால் பிசாசு என்றும் கூறினார் .
ஆனால்  இந்த கொல்லிவாய்  பிசாசு எப்படி  உருவாகிறது  என்று மட்டும் சொல்லவில்லை .இதை கேட்ட பிறகும்  அங்கு கிட்டிபுள்  விளையாடச்செல்ல நாங்கள்  ஒன்றும்  கேனப்பய   இல்ல  என்றே  முத்தப்பா  சொல்லிவிட்டான் .
பூங்குடி  தோப்புல  கள்ளு  குடிக்க  போறவங்களுக்கு  பயமே  இருப்பதில்லை .பல தடவை  பார்த்துள்ளோம்  கள்ளு , சாராயம்  குடிக்கிற ஆளுங்க  கிட்ட  பேய்  பிசாசு  அண்டாதுன்னு  புளுகியதும் அவர்தான் .

ஒருநாள்  அன்னியூர்  தீமிதி  பாத்துட்டு  வரும்போது  சுடுகாட்டு வழியே வரவேண்டி  வந்தது .முத்தப்பா தான் சைக்கிள்  ஓட்டினான்  ,நான் பின்னால்  அமர்ந்து இருந்தேன் . சுடுகாடு  தாண்டும்  வரை கண்களை  இறுக்கமாக  மூடிக்கொண்டேன் .இருந்தாலும்  யாரோ எங்கள்  சைக்கிளை  பிடித்து  இழுப்பது போல்  உணர்ந்தேன் எல்லா  தெய்வங்களையும்  மனதில் நினைத்து   ,ஒரு வழியாக   வீடு  வந்து சேர்ந்தோம் .

       இது  நடந்து  சில நாட்கள்   கழித்து  முத்தப்பாவும் நானும்  கருப்பங்காடு  வழியாக  ஒரு நாள்  செல்ல நேர்ந்தது .மனதில்  தைரியத்தை வரவழைத்து க்கொண்டு  நடந்தோம் .தூரத்தில் யாரோ? இருவர்  நடப்பது தெரிந்தது .  ஐயோ  பேயும்  பிசாசும்  சேர்ந்து போகிறதே  என்று  கை கால் உதறலுடன்  பார்த்தால்  முனுசாமியின்  மூத்த மகன்  பாண்டியனும்    கடைசி வீட்டு சாந்தி   அக்காவும்  கருப்பங்காட்டுப்பக்கம் ஒதுங்குவது  தெரிந்தது .  நான் முத்தப்பாவிடம்  சப்தமில்லாமல் சொன்னேன்  " டேய்  கொல்லி வாய் பிசாசு  டோய்  வா  திரும்பிபோயிடலாம்"  ! .

No comments:

Post a Comment