Saturday, February 9, 2013

வடக்குப்பட்டி ராமசாமி

என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது  பண்ணிட்டாங்களா ?" டீ  குடித்தபடி  சிங்கப்பூரான்  வீரமுத்து  பேச்சை  தொடங்கி வைத்தார்,கமால்பாய்   டீக்கடை  கலகலத்தது  .

ராமசாமி   வளர்த்து வந்த  ஒரு  ஆட்டு குட்டிக்கு நோய்  வந்துடிச்சு . உள்ளூரில்  யாரிடமும்  இந்த  ஆட்டை  விற்க முடியாது .இந்த ஆட்டின்   கறி  ஒன்னுத்துக்கும்  தேறாது என்று  ஆடு வெட்டும்  குட்டிபாய்  சொல்லிவிட்டார் .என்ன  செய்வது  என்று  தெரியாமல்  ராமசாமி  குழப்பத்தில்  இருந்தார் .இந்த நேரத்தில்  அங்கு வந்த  முத்தப்பா  ' ராமசாமி  ஒரு  குவார்ட்டருக்கு  ஏற்பாடு பண்ணுயா ' என்றார் . 'நானே  நொந்து  போயிருக்கேன்  நீ வேற   கடுப்ப கிளப்பாத ' என்றான்  ராமசாமி . விஷயம் அறிந்த  முத்தப்பா  ஒரு  ஐடியாவ  எடுத்து விட்டார் . ராமசாமி  நீ  என்ன பண்ற  நைசா  ஆட்ட  ஓட்டிட்டு  மெயின் ரோடு  பக்கம்  வா .

முத்தப்பா வின்  ஆலோசனைப்படி  மெயின்  ரோட்டின்  ஓரமாக  ஆட்டை  கொண்டு வந்தார்  ராமசாமி . அது  மாலை  நேரமாக இருந்தது  இன்னும்  சற்று  நேரம்   ஆனால்  இருட்ட தொடங்கிவிடும் .யாருக்காகவோ  வெகு நேரம்  காத்திருந்தனர் .ஒரு கட்டத்தில்  ராமசாமி  பொறுமை இழந்து  கோபப்பட்டார் . இடை இடையே  இந்த  ஆடு  படுத்துக்கொள்ளும் .அதை எழுப்பி  நிற்க வைக்க  படாத பாடு பட்டார் .
சற்று  தூரத்தில் சரக்கு லாரி  வருவது  தெரிந்தது . முத்தப்பா  அவசரமாக   ஆட்டை  விரட்டினார் . இவர்கள்  திட்டமிட்டது போல்  ஆடு  லாரியில்  அடிபட்டு   சிதைந்தது . இருவரும் சுதாரித்து   லாரியை  மடக்கினர் .
  
ராமசாமியின்  பாக்கியம்  கர்நாடக காரன்  லாரியாக  இருந்தது  முத்தப்பா வின் நண்பர்களும்  கூடி  கட்ட பஞ்சாயத்து  தொடங்கியது .முடிவில்  மூவாயிரம்   இழப்பீடாக  கிடைத்தது . முத்தப்பா அன் கோ  500 ரூபாய் பெற்றுக்கொண்டு  நடையை   கட்டியது .

மறுநாள் கும்பகோணம்  சென்று   ஒரு  கடையில்  சாமான்  வாங்கும்போது  மாட்டிக்கொண்டார் . அடப்பாவிகளா  கர்நாடக  லாரிக்காரன்  கொடுத்த மூவாயிரதுல  இருந்த 2  ஆயிரம்  ரூபா  நோட்டும்
கள்ள நோட்டாம்ல !

No comments:

Post a Comment