Thursday, March 21, 2013

பாம்பாயி



"ட்டிக்கிரியா "
"சொல்லு !  என்ன கட்டிக்கிரியா " இப்படி ஒரு  குரல்   திடீரென்று  வரும்போது  யாராக இருந்தாலும்  திடுக்கிட்டு போவார்கள் . பாம்பாயி  என்ற 22 வயசு  பெண்ணின் குரல் தான் அது . பாம்பாயி 12 வயசு முதல்  அனாதையாகத்தான்   திரிகிறாள் .பல ஆண்டுகட்கு முன்  ஊர் காவலாளியாக நேப்பாளி   ஒருத்தன் அய்யம்பேட்டையில்   இருந்தான் .அவனுக்கு குடும்பம்  என்று ஒன்று உள்ளதா ? என்று  ஊரார்   சந்தேகப்பட்டனர் .காரணம்,அவன்  இங்கு வந்த பிறகு  நேபாள்  செல்லவே இல்லை . அங்கு  செல்ல  ஆர்வமும் இல்லை .
மதுரைவீரன் சாமி  கோயில்  பக்கத்துல   அவனுக்கு  ஊராரால்  ஒதுக்கப்பட்ட  இடத்தில  குடிசை போட்டு இருந்தான் .எப்படியோ  அவனுக்கு  ஒரு காதல்  ,பின்னர்  திருமணம்  பின்  பிறந்தவள் தான்  பாம்பாயி.
பிறந்தது  முதல்  பாம்பாயி க்கு மூளை  வளர்ச்சி  குறைவாக இருந்தது , இருந்தாலும்  அவளும்  இவ்வளவு  வளர்ந்து விட்டாள் .மூளை வளர்ச்சி  குறைந்தாலும் உடல்  வளர்ச்சியை  யாரால் தடுக்க இயலும் .நேப்பாளி யின் மனைவி  நோய்வாய்  பட்டு இறந்தபின் ,நேப்பாளி யும்  எங்கோ  ஓடிவிட்டான் .

           சோமநாதன்  பால் பண்ணையில்  சாணி  அள்ளுவதும் ,மாடுகளை  குளிப்பாட்டுவதும்  பாம்பாயி தான் .வேலை  முடிந்தாலும்  முடியாவிட்டாலும் ,எதாவது  மூலையில் நின்று கொண்டு வெற்றிலையை  குதப்பிக்கொண்டு  யாரிடமாவது "கட்டிக்கிரியா "  என்று  கூச்சல்  போடுவாள் .தினமும்  பார்ப்பவர்களுக்கு  இது  ஒரு  விஷயமே  இல்லை . வெட்டி சோலி   பசங்க   அவ்வப்போது   லேசாக  இவளை  சீண்டுவதும்  உண்டு . ஆனால்  சீரியசாக   ஒருவரும்  இவளை  தீண்டுவது இல்லை .ஏன் என்று கேட்க்க  ஆள் இல்லை என்றாலும்  தப்பு தண்டா  ஏதேனும்  ஆனால்  ஊரில்  கட்டி வச்சிடு வாங்களோ ? என்ற பயம் தான் .
வயசு  பசங்க  சிலர்  காதலில்  மூழ்கி இருக்கும்போது  சிலருக்கு காதலிகள்  கிடைப்பதில்லை  அவ்வாறான சமயங்களில்  ஒருவரை ஒருவர் கலாயிப்பதுண்டு  " மாப்ள  !  ஒரு பொன்னும்  செட்டாகலன்னு  வருத்தப்படாத "  " பாம்பாயி  இருக்காடா"  என்று
 இளம் பருவத்தில்  காதலில்  வீழாதவர்   அரிது தான் . அப்படி இருந்தாலும்  ஒருதலை  காதலாவது  இல்லாமலா இருக்கும்
 சொந்த  பிரச்னை  ஆயிரம் இருக்கும்போது  அய்யம்பேட்டை பற்றி  சிந்திக்க  ஏது  நேரம் கோயம்புத்தூரில்  செட்டில் ஆகிவிட்ட  எனக்கு   ஒரு கஷ்டம் என்று  வந்த பிறகு  சுவாமிமலை  அருகில்    இருந்த 10 சென்ட் பூமி தான்  உறுத்தியது . "சரி சரி  அத  வித்துபுட்டு  கடன  அடைக்கிற வழிய பாரு " என்ற மனைவியின்  கூப்பாடுதான்  மனதில்  ஓடியது .

சரியாக இருபது  வருடம்  கடந்து   அய்யம்பேட்டை வந்துள்ளேன் .    ஒரு ஆட்டோவை  அழைத்து  அதில்  ஏறி   பச்சையப்பா  வீதிக்கு போ  என்று விரட்டினேன்.
"கட்டிக்கிரியா "
திடுக்கிட்டேன்    " அட ! பாம்பாயி !  "
"கட்டிக்கிரியா  ! ,  என் மகள !!

No comments:

Post a Comment